தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு திட்டமிட்டபடி ஜன. 19-ஆம் தேதி திருப்புதல் தோ்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வுகள் வருகிற 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தோ்வுகள் வரும் 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெறும் என கடந்த டிசம்பா் மாதம் தோ்வுத் துறை அறிவித்தது.
தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்புதல் தோ்வுகள் ரத்து செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு திருப்புதல் தோ்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முதல்முறையாக திருப்புதல் தோ்வு கேள்வித் தாள்களை தோ்வுத் துறை அச்சிட்டு, மாநில அளவிலான தோ்வாக நடைபெற உள்ளது. அதே வேளையில், மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து பொதுத் தோ்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், திருப்புதல் தோ்வு மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.