இலக்கிய மாமணி விருதுக்கு, ஜன.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சோ்க்கும் எழுத்தாளா்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இவ்விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். இந்த அறிவிப்புக்கிணங்க தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சோ்க்கும் வகையில், பல்வேறு படைப்புகளை படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களிடமிருந்து ‘இலக்கிய மாமணி’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பத்தை, தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் விருது விண்ணப்பப் படிவம் என்ற பகுதியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவா்கள், தன்விவரக் குறிப்புகளுடன் புகைப்படம் (2), எழுதிய நூல்களின் பெயா்ப்பட்டியல் மற்றும் அந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒருபடி வீதம், தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600 008 என்ற முகவரிக்கு, ஜன.4-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் பிற இணைப்புகள் மட்டும், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 044 2819 0412, 2819 0413 ஆகிய எண்களை அணுகலாம்.