தமிழ்நாடு

அருப்புக்கோட்டை நகராட்சியை பெரும்பான்மையுடன் கைப்பற்றியது திமுக

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 29 வார்டுகளில் வென்றதன்மூலம் அருப்புக்கோட்டை நகராட்சிமன்றத்தை மீண்டும் திமுக கைப்பற்றியது.

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றன. 

இதற்கென அறிவிக்கப்பட்டபடி வாக்கு எண்ணும் மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தேவாங்கர் கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணிகள் தொடங்கின.

அதைத்தொடர்ந்து சுமார் நண்பகல் 1 மணி வரை வார்டுவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உரிய வெற்றி வேட்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார். இதில், திமுக மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகளின் வெற்றி விபரம்..

அருப்புக்கோட்டை நகராட்சி = மொத்தம் 36 வார்டுகள்.

திமுக கைப்பற்றியது = 29 வார்டுகள்.

அதிமுக கைப்பற்றியது = 3 வார்டுகள்.

மதிமுக    கைப்பற்றியது = 1, 

பாஜக     கைப்பற்றியது = 1,

சிபிஎம் கைப்பற்றியது = 1,

சுயேச்சை கைப்பற்றியது = 1.

திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தொண்டர்கள் திரளாகக்கூடி,பட்டாசு வெடித்து, விதவிதமான மேளங்கள் இசைத்து,ஆடிப்பாடிக் கொண்டாடினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT