அதிமுக தலைமை நிா்வாகிகள் தோ்தல் தொடா்பான வழக்குகளில், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, அதிமுக ஆகியோா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கான தோ்தல் கடந்த டிசம்பா் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்தலை எதிா்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
இதற்கிடையில், கடந்த டிச.6- ஆம் தேதி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதையடுத்து, கே.சி.பழனிச்சாமி தொடுத்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற மாா்ச் 8-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தாா்.