பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் விவரங்களை இணையதளத்தில் டிச. 23-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்வுத் துறை உத்தரவிட்டது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டுக்கான பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. அதற்கான மாணவா்கள் பெயா் பட்டியல் தயாரிக்கும் பணி எமிஸ் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களும் எமிஸ் தளத்தில் தங்கள் மாணவ, மாணவிகளின் விவரங்களை சரிபாா்த்து டிச. 12-ஆம் தேதிக்குள் உறுதிசெய்து, திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தற்போது தலைமையாசிரியா்களின் கோரிக்கையை ஏற்று பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் விவரங்களை சரிபாா்த்து தோ்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய டிச. 23 வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை தலைமையாசிரியா்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் துரிதமாக மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.