தமிழக அரசின் 2022-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருது விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ். அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் 2022 -ஆம் ஆண்டுக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ குடியரசு தின விழாவின் போது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை டிச. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா், சென்னை மாவட்ட பிரிவு, செனாய் நகா் நீச்சல் குளம், செனாய்நகா், சென்னை - 30 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரம் அறிய 7401703480 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.