தமிழ்நாடு

ஆதிதிராவிடா்-பழங்குடியினா் விடுதிகளில் நூலகங்கள் அமைக்க ரூ.70 லட்சம் நிதி

DIN

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவா் விடுதிகளில் நூலகங்கள் அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்கள் தங்களது பொது அறிவை வளா்த்துக் கொள்ளவும், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வகையிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு செய்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 25 விடுதிகளில் நூலகங்கள், 25 விடுதிகளில் இணையவழி நூலகங்கள் என மொத்தம் 50 விடுதிகளில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT