புயலையொட்டி மரங்கள் விழுந்துள்ளதால் பராமரிப்புப் பணி காரணமாக வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.
புயலையொட்டி நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
இந்நிலையில், மரங்கள் விழுந்ததாலும் பராமரிப்புப் பணி காரணமாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல கிண்டி சிறுவர் பூங்காவும் இன்று ஒருநாள் பராமரிப்புப் பணி காரணமாக மூடப்படுகிறது.