தமிழ்நாடு

நவீன மின்மயானம்: ரூ.5 லட்சம் வழங்கிய காஞ்சிபுரம் உணவக உரிமையாளர்கள்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நவீன மின்மயானம் அமைக்க ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினர் உணவக உரிமையாளர்கள்.

காஞ்சிபுரம் நாகலூத்து மேடு பகுதி சுடுகாட்டில் நவீன மின்மயானம் அமைக்க உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் ரூ.5லட்சம் நன்கொடையினை மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் நவீன மின் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி காஞ்சிபுரத்தில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் முருகேசன் தலைமையிலான சங்க நிர்வாகிகள் ரூ.5லட்சத்துக்கான காசோலையினை நன்கொடையாக வழங்கினார்கள்.

இத்தொகையினை அவர்கள் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினர். இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், மண்டலக்குழுத் தலைவர் எஸ்.சந்துரு, பணிக்குழுவின் தலைவர் சுரேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT