தமிழ்நாடு

கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ் புயல்!

DIN

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், மாமல்லபுரம் அருகே புயலின் வெளிவட்டப் பகுதி கரையை கடந்து வருகிறது.

இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 70 கி.மீ. வரை காற்று வீசுகிறது. தொடர்ந்து மாண்டஸ் புயல் 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயலின் மையப்பகுதி நள்ளிரவு 2 மணிக்குள் கரையை முழுவதுமாக கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், அப்பகுதிகளில் உள்ள உணவகங்களை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புயல் கரையை கடக்கும் மாமல்லபுரம் சுற்றுப்பகுதி மக்களை நிவாரண முகாம்களில் மாவட்ட நிர்வாகம் தங்கவைத்துள்ளது.

புயல் கரையை கடந்த பிறகு சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT