தமிழ்நாடு

அண்ணா பல்கலை: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

DIN

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலை தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், இன்றிரவு முதல் நாளை அதிகாலை மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்துவருகிறது.

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த  செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று அண்ணா பல்கலைக்கழகத்தின், உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT