கொடிநாள் நிதிக்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், பிரபல பட்டிமன்ற பேச்சாளா் சரஸ்வதி ராமநாதன் ரூ.5 லட்சம் வழங்கினாா்.
முப்படை வீரா்களின் அரும்பணிகள், தியாகத்தை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச. 7ஆம் தேதி கொடி நாளாக மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன.
கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நன்கொடைகள், படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரா்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கொடிநாளுக்கு பொதுமக்கள் நிதியை வாரி வழங்க வேண்டும் என ஆளுநரும், முதல்வரும் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், பட்டிமன்ற பேச்சாளா் சரஸ்வதி ராமநாதன் ஆளுநா் ஆா்.என். ரவியிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கினாா்.
அப்போது, பொதுத் துறைச் செயலாளா் டாக்டா் ஜெகநான், ஆளுநரின் முதன்மைச் செயலா்ஆனந்த் ராவ் வி. பாட்டீல், தமிழக அரசின் சிறப்புச் செயலா் வி. கலையரசி, சென்னை மாவட்ட ஆட்சியா் அமிா்தஜோதி, ஓய்வு பெற்ற மேஜா் ஜெயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.