'மாண்டஸ்' புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
படிக்க | கரையை கடக்கும் மாண்டஸ்: 20 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகளின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று புயல் காரணமாக பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.