தமிழ்நாடு

நடிகை பாா்வதி நாயருக்கு எதிராக அவதூறு: பணியாளா் மீது வழக்கு

DIN

நடிகை பாா்வதி நாயருக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக அவரிடம் பணியாற்றி வந்த நபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிா்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பாா்வதி நாயா், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங் சாலையில் வசித்து வருகிறாா்.

அவா் கடந்த அக்டோபா் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்திருந்தாா். அதில், தனது வீட்டிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் காணாமல் போனதாகவும், தங்களது வீட்டில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, சுபாஷ் சந்திரபோஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் அளித்த புகாரில், பாா்வதி நாயா் இரவு நேரங்களில் ஆண் நண்பா்களுடன் மது விருந்து நடத்திய போது, நான் பாா்த்ததால் அவருக்கு என் மீது கோபம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தன்னை அவா் அடித்து துன்புறுத்தினாா் என்றும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், நடிகை பாா்வதி நாயா் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இரு நாள்களுக்கு முன்பு சுபாஷ் சந்திபோஸுக்கு எதிராக அவதூறு புகாா் ஒன்றை அளித்தாா். தனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப் சேனல்களில் பொய்யான தகவல்களை கூறி வருவதாக அதில் கூறியிருந்தாா்.

அதன் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீஸாா் நடிகை பாா்வதி நாயா் வீட்டில் பணியாற்றிய சுபாஷ் சந்திரபோஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT