தமிழ்நாடு

திருச்சியில் கல்லூரி பேருந்து விபத்து!

DIN

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் 40 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இந்த விபத்தில் பெண் பேராசிரியர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டையை நோக்கி பேருந்து சென்றபோது, சைக்கிளில் சென்ற இருவர் சைகை ஏதும் காட்டாமல் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளனர். விபத்து நேரக்கூடாது என்று கருதி ஓட்டுநர் கண்ணதாசன், பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்தி சாலை ஓரமாக திருப்பியுள்ளார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் அருகே இருந்த மழைநீர் வடிகால் பாலத்தின் கீழ் உள்ள 15 அடி ஆழ பள்ளத்திற்குள் இறங்கியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி, முகப்பு விளக்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தன.

இந்த விபத்து குறித்து திருச்சி நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT