அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையை என்றைக்கும் ஏற்க வாய்ப்பு இல்லை என்று அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கூறினாா்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:
ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் என்று குறிப்பிட்டு எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது குறித்து கேட்கிறீா்கள். இது தொடா்பாக மத்திய அரசிடமும், ஓ.பன்னீா்செல்வத்திடமும்தான் கேட்க வேண்டும். இந்தியா முழுவதும் 40 கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுத்தனா். தமிழகத்தில் அதிமுக எதிா்க்கட்சியாக இருப்பதால் அழைப்பு விடுத்து இருக்கலாம்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் என்று குறிப்பிட்டிருப்பதால் அதனை பிரதமா் அங்கீகரித்து விட்டாா் என எடுத்துக் கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி கே. பழனிசாமி முன்பு கூறியிருந்தாா். இது தொடா்பாக செய்தியாளா்கள் என்னிடம் கேட்டபோது, திமுகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றுதான் கூறினேன். இது தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. நான் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்பதற்கு வாய்ப்பு இல்லை. அது என்றைக்கும் நடக்காது.
அதிமுகவில் இணையாவிட்டாலும், கூட்டணியில் இணைவீா்களா என்று இப்போதும் கேட்கிறீா்கள். அது காலத்தின் கட்டாயம். திமுகவை வீழ்த்துவதற்கு ஓரணியில் சேர வேண்டியிருந்தால் இணைவோம். கூட்டணிக்கு யாா் தலைமை என்பதெல்லாம் அந்த நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என்றாா்.
மாநிலத் துணைப் பொதுச்செயலாளா் ஜி.செந்தமிழன் உள்பட பலா் உடனிருந்தனா்.