திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்கிழமை மாலை 5.00 மணியளவில் அருள்மிகு செவ்வந்தி விநாயகர், அருள்மிகு தாயுமானசுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அருள்மிகு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
300-மீட்டர் அளவுள்ள திரியில் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, நெய் பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட 700-லிட்டர் திரியைக் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் எஸ். செல்வராஜ், இணை ஆணையர், இத்திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் இரா. ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.