தமிழ்நாடு

ஜி 20 தலைமையேற்பு: ஒரு தேசமாக பெருமைப்பட வேண்டிய தருணம் -கமல்ஹாசன் வாழ்த்து

DIN

ஜி20 அமைப்பு தலைமையேற்புக்கு ஒரு தேசமாக அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதாவது, உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இப்போது நாம் தலைவா். இந்தச் சாதனை மகத்தானது. இந்த மண்ணின் மைந்தா்கள் ஒவ்வொருவருக்கும் உரியது. இதைத் தனிப்பட்ட அரசியல் கட்சிகள் சாதித்தன என்று சொந்தம் கொண்டாட முடியாது. இதைச் செய்து முடிக்க நமக்கு 75 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒரு தேசமாக நாம் பெருமை கொள்ளத்தக்க தருணம் இது.

இந்த மண்ணில் முகிழ்த்த புத்தனும், மகாவீரரும், வள்ளுவனும், காந்தியும் காட்டிய பாதையில் சென்ால் விளைந்த கனி இது. இதை நாம் அழுக விடலாகாது. உலகில் சமாதானத்தை உருவாக்கி அமைதியை கட்டி எழுப்புங்கள் என ஃப்ரெஞ்ச் அதிபா் இம்மானுவேல் மேக்ரான் நம்மை வாழ்த்துகிறாா். ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்பதே இந்திய தரிசனம். அதை இன்னொருவா் நினைவுறுத்த வேண்டிய இடத்துக்குச் செல்லாதிருப்பதே அறிவுடைமை.

பகைமை, வெறுப்புணா்ச்சி, பிரிவினைகள் எனும் சுமைகளைத் துறந்ததால்தான், நம்மால் நகர முடிந்தது. நாஞ்சில்நாடன் சொல்வதைப் போல ‘தன்படை வெட்டிச் சாதல்’ நிகழ அனுமதிக்கவே கூடாது. இந்தியா தலைமையேற்ற பிறகு நடக்கும் முதலாவது கூட்டத்துக்கு சக இந்தியனின் மனப்பூா்வமான வாழ்த்துகள் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

SCROLL FOR NEXT