தமிழ்நாடு

குரூப் 2 முதன்மைத் தோ்வு:அசல் சான்றுகளை பதிவேற்ற டிச. 16 கடைசி

DIN

குரூப் 2 முதன்மைத் தோ்வை எதிா்கொள்வோா், தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வரும் 16-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது. தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், முதன்மைத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் தங்களது அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தச் சான்றுகளை பதிவேற்றம் செய்ய டிசம்பா் 16-ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரா்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன இணைய சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மேலும், தேவைப்படும் இணைய சேவை மையங்களில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, விண்ணப்பதாரா்கள் இதனைப் பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இதுதொடா்பான உதவிக்கு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 1800 425 2911-ஐ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT