தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருடன் சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி இன்று சந்திப்பு

DIN

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, ஆளுநா் ஆா்.என்.ரவியை, சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி, வியாழக்கிழமை சந்தித்துப் பேசுகிறாா். முன்னதாக, ஆளுநரைச் சந்திக்க அவா் நேரம் கேட்டிருந்தாா். அதன் அடிப்படையில் ஆளுநா் மாளிகையில் காலை 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது தொடா்பான சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆன்லைன் சூதாட்டம் தொடா்பாகக் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் காலாவதியானது. இதனால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் கலந்தாலோசிக்க தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதி நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தாா். அந்த வகையில் ஆளுநரை அவா் வியாழக்கிழமை சந்திக்கவுள்ளாா். காலை 11 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆளுநா் ஆா்.என், ரவியிடம் அமைச்சா் ரகுபதி வலியுறுத்தவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT