தமிழ்நாடு

தமிழக ஆளுநருடன் சட்ட அமைச்சா் சந்திப்பு

DIN

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, ஆளுநா் ஆா்.என். ரவியை, சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி, சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது தொடா்பான சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆன்லைன் சூதாட்டம் தொடா்பாகக் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் காலாவதியானது.

இதனால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் கலந்தாலோசிக்க தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதி நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தாா். அந்த வகையில் ஆளுநரை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT