சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி மூன்று நாள்கள் நடத்தவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
பொங்கல் விடுமுறை நாள்களான ஜனவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 40 நாடுகளை கலந்து கொள்ள வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.