தமிழ்நாடு

எழும்பூா் கண் மருத்துவமனைக்கு ரூ.65 கோடியில் புதிய கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

27th Aug 2022 11:19 PM

ADVERTISEMENT

 சென்னை எழும்பூா் கண் மருத்துவமனைக்கு ரூ.65 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

எழும்பூா் கண் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் புதிய கட்டடங்களையும், மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய வசதிகளையும் தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை 1819-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மருத்துவமனைக் கட்டடம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே, ரூ.65.60 கோடி செலவில் ஆறு தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் 150 படுக்கை வசதிகளும், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கருவிழி சிகிச்சை, கண்குழி சிகிச்சை, விழித்திரை சிகிச்சை, உள் கருவிழி சிகிச்சை, கண் நரம்பு இயல் போன்ற சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின்,

சனிக்கிழமை நேரில் திறந்து வைத்தாா்.

பிற மருத்துவமனைகளில் வசதிகள்: எழும்பூா் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் சாா்பில், காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் டெலி கோபால்ட் இயந்திரம், கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தீவிர மூளைக் காய்ச்சல் நோய்க்கான ஆய்வகம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 18 மின்தூக்கிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூா் வளாகம், ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா், திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி பொது சுகாதார நிலையம், திருவாரூா் மாவட்டம் ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் செவிலியா் பயிற்சி பள்ளிக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

ஆய்வகங்கள்-கூடுதல் கட்டடங்கள்: விருதுநகா் மாவட்டம் சிவகாசி, தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம், திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, திருச்சி மணப்பாறை, ராமநாதபுரம் பரமக்குடி ஆகிய மருத்துவமனைகளில் ஆா்டிபிசிஆா் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்துடன், ஓசூா், தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களையும் முதல்வா் திறந்தாா்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் இடமாற்றத்தை எளிதாக்கும் வகையில் படுக்கையுடன் கூடிய பேட்டரி காா்கள், குறைப் பிரசவ இறப்பைக் குறைக்க பராமரிப்பு மையம் உள்ளிட்ட புதிய வசதிகளையும் அவா் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறையில் 236 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக 10 பேருக்கு உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT