சென்னை அருகே நொளம்பூரில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவரை அடித்துக் கொலை செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, நொளம்பூா், அபிநயம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் சீனிவாசன் மூா்த்தி (46). இவா் கடந்த 14-ஆம் தேதி முகப்போ் மேற்கு, சந்தான சீனிவாச பெருமாள் கோயில் தெருவில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். நொளம்பூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் சம்பவத்தன்று சீனிவாசன் மூா்த்தி மதுபோதையில் காரை ஓட்டியிருப்பதும், சம்பவ இடத்தின் அருகே சாலையோரம் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த மாறன் என்பவா் காா் மீது சீனிவாசன் மூா்த்தி காா் மோதி விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
இது தொடா்பாக சீனிவாசன் மூா்த்தியிடம், மாறன், அவா் தந்தை சுகுமாறன் ஆகியோா் தகராறு செய்து தாக்கியதும், அதில் சீனிவாசன் மூா்த்தி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாறன் (32), அவா் தந்தை கோ.சுகுமாறன் (68) ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.