தமிழகத்தில் புதிதாக 649 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் ஆண்கள் 384, பெண்கள் 265 என மொத்தம் 649 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 120 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 60,810 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து ,16,146 போ் குணமடைந்துள்ளனா். புதன்கிழமை மட்டும் 906 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனா். தமிழகம் முழுவதும் 6,631 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தமிழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு 670 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.