தமிழ்நாடு

அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை: பழனிவேல் தியாகராஜன் பேச்சு

DIN

அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என மதுரையில் நடைபெற்ற அரசு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

மதுரை மாவட்ட மத்திய தொகுதிக்குள்பட்ட  எஸ்.எஸ்.காலனியில் உள்ள எம்.ஆர்.பி மஹாலில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 586 பயனாளிகளுக்கு ரூ.93,14,596 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். 

முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:  

இந்திய வரலாற்றில் பொருளாதாரம், சட்டம், மனித வளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தனி நபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என பழனிவேல் தியாகராஜன் கூறினார். 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர்,  மாநகராட்சி துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT