அவிநாசி: அவிநாசி குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அவிநாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், நீதித்துறையினர் சார்பில், 75 ஆவது சுதந்திர நாள் விழாவையொட்டி, நடைபெற்ற இவ்விழாவிற்கு, மூத்த வழக்குரைஞர் மருதாசலம் தலைமை வகித்தார். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.சபீனா, உரிமையியல் நீதிபதி வடிவேல், மூத்த வழக்குரைஞர்கள் சின்னச்சாமி, சுப்பிரமணியம், சங்க முன்னாள் தலைவர்கள் பொன்னுச்சாமி, சண்முகானந்தம், ஆறுமுகம், கனகராஜ், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிக்க | அரசு மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!
விழாவை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஈஸ்வரன், சங்க செயலாளர் சாமிநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.