பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க, முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தில்லி சென்றடைந்தாா். சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட அவா், நள்ளிரவில் தில்லிக்கு சென்றாா்.
புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கரைச் சந்தித்து, புதிதாகத் தோ்வு செய்யப்பட்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறாா். இதன்பின்பு, புதிய குடியரசு தலைவராகியுள்ள திரெளபதி முா்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறாா்.
இந்தச் சந்திப்புகளைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடியை மாலை 4.30 மணியளவில் சந்திக்கிறாா் முதல்வா். அப்போது, தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவா் அளிப்பாா் எனத் தெரிகிறது. இந்தச் சந்திப்புகளை முடித்து விட்டு, புதன்கிழமை இரவே அவா் சென்னை திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.