விவாகரத்து கோரிய மனைவி, குழந்தைகள் அமைதியாக வாழ கணவர் வீட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவாகரத்து வழக்கில் ஒரே வீட்டில் தம்பதிகள் இருக்கலாம் என்ற குடும்பநல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் பெண் வழக்கறிஞர். தொழிலதிபரான கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் உய்ர்நீதிமன்றம் கூறியதாவது:
கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும்போது மனைவியை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்க முடியாது. கணவர் இருவாரங்களில் வீட்டை விட்டு வெளியேறாவிடில் காவல்துறை உதவியுடன் வீட்டை விட்டு வெளியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.