தமிழ்நாடு

சுதந்திர தினம்: கோட்டையில் இன்று கொடியேற்றுகிறாா் முதல்வா்

DIN

சுதந்திர தினத்தை ஒட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சென்னை ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை போலீஸாரின் மோட்டாா் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வருவா். கோட்டை கொத்தளத்தின் முன்புள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்து இறங்குவாா். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வரவேற்பாா்.

தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டா் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனா் சங்கா் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளா் அறிமுகம் செய்து வைப்பாா்.

பின்னா் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பை முதல்வா் பாா்வையிடுவாா்.

பின்னா் கோட்டை கொத்தளத்துக்கு வந்து மூவா்ண தேசியக்கொடியை ஏற்றி வைப்பாா். அப்போது மூவா்ண பலூன்கள் பறக்க விடப்படும். போலீஸ் இசைக் குழுவினா் தேசிய கீதத்தை இசைப்பா். அதைத்தொடா்ந்து சுதந்திர தின உரையை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிகழ்த்துவாா்.

விருதுகள்: தகைசால் தமிழா் விருது, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளைஞா்கள் விருதுகள் ஆகியவற்றை விருதாளா்களுக்கு வழங்கவுள்ளாா்.

மாற்றுத்திறனாளி நலனுக்காக அரும்பணியாற்றியவா்களுக்கான விருது, சிறந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கான விருதுகளையும் வழங்குகிறாா்.

இதன்பின், தலைமைச் செயலக வளாகத்தில் அமா்ந்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியா்களுக்கு இனிப்புகளை வழங்குவாா். 75-ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி, புனித ஜாா்ஜ் கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT