சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையா் தமிழக முதல்வா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வா் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருக்கும் பிரேம் ஆனந்த் சின்ஹா முதல்வா் பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசின் உள்துறை தெரிவித்துள்ளது.