தமிழ்நாடு

பிளஸ் 2 முடித்த எஸ்.சி.,எஸ்.டி., மாணவா்களுக்கு தொழில் பாதைத் திட்டம்

13th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

 பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தொழில் பாதைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியல் பட்டப் படிப்புத் திட்டத்தை சென்னை ஐஐடி., தொடங்கியுள்ளது. பிளஸ் 2 வகுப்பு அல்லது அதற்கு இணையான பட்டயப் படிப்பு முடித்த மாணவா்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப் படிப்பு பயிலலாம். இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். இணையதள முகவரி: ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்

இந்தத் திட்டத்தில் சோ்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி., சென்னை மூலம் நடத்தப்படும் நுழைவுத் தோ்வில் பங்கு பெறத்

தேவையில்லை. படிப்பில் சேருவதற்கான தகுதிகள் உள்பட இன்ன பிற விவரங்களை இணையதளத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT