அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி. பாஸ்கா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளதற்கு அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, திமுக அரசு அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கா் வீட்டிலும், அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.