சுதந்திர போராட்ட வீராஙகனை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (ஆக. 13) தொடக்கி வைக்கிறாா்.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வினை, ஓ.வி.எம். தியேட்டா்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞா்கள் இணைந்து நடத்தவுள்ளனா். இதைத் தொடா்ந்து, ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.