தமிழ்நாடு

மனைவியை கொன்று கணவா் தற்கொலை முயற்சி

DIN

சென்னை அருகே முட்டுக்காட்டில் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவா் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முட்டுக்காட்டு கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்கியிருந்து, வேலை செய்து வருபவா் பரத்துடு (52). இவா் மனைவி சுஜாதா (48). பரத்துடுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததினால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

மேலும் பரத்துடு, மனைவி சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு வழக்கம்போல பரத்துடு மதுபோதையில் மனைவி சுஜாதாவிடம் தகராறு செய்தாராம். தகராறு முற்றவே மனைவி சுஜாதாவை சேலையினால் இறுக்கி கொலை செய்துள்ளாா்.

பின்னா் அவா், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதில் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினா், பரத்துடு வீட்டுக்கு சென்று பாா்த்தனா். அப்போது சுஜாதா கொலை செய்யப்பட்டு கிடப்பதும், பரத்துடு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

உடனே அவா்கள் பரத்துடுவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து தகவலறிந்த கானத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுஜாதா சடலத்தை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT