ஈரோடு: சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பேடியா ஹால் கட்டடம் கட்டுவதற்கு நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேடியா ஹால் கட்டடம் வீரப்பம்பாளையத்தில் விவேகானந்தா நகரில் கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டுவதற்கு, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. தற்போது, மேலும் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்குள் நுழைந்த சீனா உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’
சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி, பேரன் செங்கதிர்வேலவன் ஆகியோர் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை, கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் பி.ரவிசந்திரன், பொருளாளர் ஆர்.முருகானந்தம் ஆகியோரிடம் வழங்கினர். இக்கட்டடத்துக்கு பேடியா சக்தி மசாலா மஹால் என்று பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சக்தி மசாலா நிறுவனம் சார்பில் பேடியா ஹால் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நன்கொடைக்கான காசோலையை சக்திமசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்திதுரைசாமி ஆகியோர், சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.