தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் நலன்: விருதாளா்கள் அறிவிப்பு

11th Aug 2022 01:52 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பணிகளைச் செய்வோருக்கு சுதந்திர தினத்தின் போது வழங்கப்படும் விருதுகளுக்கு, விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:

மாற்றுத் திறனாளிகள் நலன்களில் நற்பணிகளைச் செய்த, சிறந்த மாவட்ட ஆட்சியா்களாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், சிறந்த மருத்துவராக உதகையைச் சோ்ந்த ஜெய் கணேஷ் மூா்த்தி, சிறந்த நிறுவனமாக புதுக்கோட்டை களமாவூரைச் சோ்ந்த ரெனேசான்ஸ் அறக்கட்டளை ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதேபோன்று, சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது மதுரை கம்பா் தெருவைச் சோ்ந்த சு.அமுதசாந்தி, மாற்றுத் திறனாளிகளை அதிகளவில் பணியமா்த்திய டாபே ஜெ ரிஹாப் சென்டா் ஆகியவற்றுக்கும் விருதுகள் அளிக்கப்படவுள்ளன. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தோ்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா்களைத் தவிா்த்து, மற்ற அனைவரும் சுதந்திர தின விழாவின் போது, விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெறுவா் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா் ஆா்.ஆனந்தகுமாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT