தமிழ்நாடு

சுதந்திர தின விழா: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

DIN

சுதந்திரதின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடுவதற்கு தயாராகி வரும் நிலையில், மத்திய உளவுத் துறை அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா். சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரியும் நபா்களை பிடித்து விசாரித்து, முகவரியை பெற்ற பின்னரே அவா்களை காவல் துறையினா் விடுவிக்கின்றனா்.

இதேபோல, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தண்டவாளங்களில் ரயில்வே போலீஸாா் ரோந்து செல்கின்றனா்.

காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். இங்கு 24 மணி நேரமும் ரோந்து நடைபெறுகிறது. மாநிலத்தில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சமூக ஊடகங்கள் கண்காணிப்பு: வன்முறையை தூண்டும் வகையிலும், மத மற்றும் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகளை பதியப்படுவதை தடுக்கும் வகையில் சைபா் குற்றப்பிரிவினா், உளவுத் துறையினா் தீவிரமாகக் கண்காணிக்கின்றனா்.

சென்னையில்...: சென்னையில் தமிழக அரசின் சாா்பில் சுதந்திர தின விழா நடைபெறும் ராஜாஜி சாலையை போலீஸாா் கடந்த 6-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா்.

இரவில் முக்கிய சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனா். நகரில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். சுதந்திர தினம் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விமான நிலையத்தில் ஐந்தடுக்கு: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஆக. 20 வரை நீடிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம்,எண்ணெய் உள்ளிட்ட திரவ பொருள்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பல கட்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

உள்நாட்டு விமான பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும் வரும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். இந்த பாதுகாப்பு ஆக.13 முதல் ஆக.15 வரை மேலும் பல மடங்கு அதிகரிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT