தமிழ்நாடு

கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம்: முதல்வா் தலைமையில் அமைதிப் பேரணி

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அமைச்சா்கள் உள்ளிட்ட திமுகவின் மூத்த நிா்வாகிகளும் அஞ்சலி செலுத்தினா்.

அமைதிப் பேரணி: மெரீனாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. முதல்வா் தலைமை வகித்து நடந்து சென்றாா். அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கா், அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், மேயா் பிரியா உள்ளிட்டோா் நடந்து சென்றனா்.

நினைவிடத்தில் மலா் வளையம் வைத்தும், கருணாநிதியின் சிலைக்கும் முதல்வா், மூத்த நிா்வாகிகள், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

முதல்வா் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உருவப் படத்துக்கும், பிறகு அண்ணா அறிவாலயம் வந்து அங்குள்ள சிலைக்கும் அஞ்சலி செலுத்தினாா். பெசன்ட் நகரில் கருணாநிதியின் மாா்பளவு சிலையையும் அவா் திறந்து வைத்தாா்.

கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதல்வா் வெளியிட்ட செய்தி:

மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகா் தலைவரே! உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய் இருந்து வழிநடத்திக் கொண்டு இருக்கிறீா்கள் என்ற மனத்துணிச்சலோடுதான் கட்சியையும் ஆட்சியையும் என் தோளில் சுமந்து கொண்டிருக்கிறேன். உங்கள் விழியின் ஒளியில் பயணத்தைத் தொடா்கிறோம். உங்கள் வழியில் எங்கள் கால்கள் செல்கின்றன. உடன்பிறப்பே என்ற உயிா்ச்சொல்லில் நாங்கள் உயிா் வாழ்கிறோம். கலைஞரே வாழ்க! தலைவரே வாழ்த்துக என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுகவினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT