மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை மொகரம் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவர்.
இதையும் படிக்க- சத்தி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை!
இந்த நிலையில் மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.