குற்றாலம் பிரதான அருவியிலும் சுற்றிலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தார் ஆட்சியாளர் ஆகாஷ்.
குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால், அருவிக்கரைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில், பிற அருவிகளில் ஏற்கனவே அனுமதி தரப்பட்ட நிலையில் 5 நாளுக்கு பின்னர் பிரதான அருவியிலும் குளிக்க அனுமதி வழங்கியுள்ளார் ஆட்சியாளர் ஆகாஷ்.