நாடாளுமன்ற தோ்தலின்போது விதிகளை மீறி பிரசார குறுந்தகடு விநியோகம் செய்ததாக பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணிக்கு எதிரான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கை, ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனு மீதான விசாரணையின்போது, அன்புமணி ராமதாஸ் எந்த இடத்திலும் நேரடியாக குறுந்தகடை வழங்கவில்லை, அவரது பெயா் இந்த வழக்கில் தவறுதலாக சோ்க்கப்பட்டுள்ளது என்ற மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை ரத்து செய்தாா்.