தமிழ்நாடு

குழப்பத்தில் காங்.: தலைவரைத் தொடர்ந்து பொதுச்செயலரும் ராஜிநாமா

DIN


பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகிய நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ராஜிநாமா செய்தார்.

தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய சித்துவுக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்ராவும் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், பஞ்சாப் சட்டப்பேரவை அமைச்சராக பதவியேற்ற ரசியா சுல்தானாவும் சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

இவ்வாறு நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அம்மாநிலத்தில் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்ற சித்து இரண்டே மாதங்களில் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT