தமிழ்நாடு

மக்களின் எதிர்ப்புகளை மீறி தலைவராகும் பட்டியலின இளம்பெண்!

DIN


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மலைக்கிராம மக்களின் எதிர்ப்பை மீறி வேட்புமனு தாக்கல் செய்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண், போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராவது உறுதியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட மலைக்கிராமம் நாயக்கனேரி. இந்த ஊராட்சி 9 வார்டுகள் கொண்டது.  இந்த ஊராட்சிக்கு சென்ற முறை வரை மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை பட்டியலின பெண்கள் போட்டியிடும் தொகுதியாக ஒதுக்கப்பட்டது.  இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். 

இந்த நிலையில் மலைக்கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, பட்டியலினத்தை சேர்ந்த பியூலா, இந்துமதி ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை வேட்புமனு பரிசீலனையின்போது பியூலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாவது உறுதியாகி உள்ளது. 

எதிர்ப்புகளை தாண்டி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைய இருந்த கடைசி நேரத்தில் இந்துமதி ஓடி வந்து தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதால் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT