தமிழ்நாடு

தாம்பரம் ரயில் நிலையம் அருகே பயங்கரம்: பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

DIN

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இன்று பிற்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் வியாழக்கிழமை மதியம் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது மாணவி ஸ்வேதாவை ராமு என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.

அதன்பிறகு, அந்த இளைஞரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி ஸ்வேதா உயிரிழந்தார். கத்தியால் குத்திய ராமுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்வாதி என்ற இளம்பெண்ணை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT