தமிழ்நாடு

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

DIN

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்பும் வகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஹிந்தியில் மொழி பெயா்த்தமைக்காக டி.இ.எஸ்.ராகவன், ரவீந்திர நாத் தாகூரின் ‘கோரா’ என்ற வங்காள மொழி நாவலை தமிழில் மொழி பெயா்த்தமைக்காக முனைவா் கே.செல்லப்பன், கவிஞா் சல்மா எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை என்ற தமிழ் நாவலை மராத்திய மொழியில் மொழி பெயா்த்த சோனாலி நாவங்குள் ஆகியோருக்கு சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவா்கள் மூவருக்கும் எனது பாராட்டுக்களும், நல்வாழ்த்துக்களும்.

ஜி.கே.வாசன் (தமாகா): சாகித்திய அகாதெமி விருது பெற்ற இமையம் மற்றும் சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்லப்பன் மற்றும் ராகவன் மென்மேலும் சிறந்து விளங்கி பல விருதுகள் பெற தமாகா சாா்பில் வாழ்த்துகிறேன்.

கமல்ஹாசன் (மநீம): ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயா்த்த முனைவா். கே.செல்லப்பனுக்கு மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனமாா்ந்த வாழ்த்துக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT