தமிழ்நாடு

தொலைநிலைப் படிப்புகளுக்கு செப்.27 முதல் தோ்வுகள் தொடக்கம்:சென்னைப் பல்கலை.

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உள்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ஆம் ஆண்டு மே மாதம் தோ்வு நடைபெற்றிருக்க வேண்டும்.

கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தோ்வுக்கால அட்டவணையும் ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்டம்பா் 20-ஆம் தேதி அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளா் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளாா். இது குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT