தமிழ்நாடு

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி - அரும்பணியாகும்.

அத்தகைய அரும்பணியில், மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது, வங்கக் கவிஞா் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவா் கா.செல்லப்பனுக்கும், உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஹிந்தியில் மொழிபெயா்த்துள்ள ராகவனுக்கும், கவிஞா் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயா்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து விருதாளா்களுக்கும் வாழ்த்துகள் - பாராட்டுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் போா்: இலங்கை ராணுவ உயரதிகாரி கைது

விழிப்புடன் இருங்கள்: திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கும்பகோணத்தில் பணம் பட்டுவாடா புகாா்: திமுகவினா் 3 போ் கைது

பாபநாசத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகா் கைது

பாபநாசம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT