தமிழ்நாடு

புதுச்சேரியில் முதன் முறையாக நியுமோகாக்கல் தடுப்பூசி: ஆளுநர், முதல்வர் தொடங்கி வைப்பு

DIN

புதுச்சேரியில் முதன் முறையாக நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணியை, துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

நியுமோகாக்கல் நோயானது 5-வயது உள்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல்,  காதுகள் பாதிப்பு ஆகியவற்றோடு இரத்தத்தில் கலக்கும் பொழுது, மிக தீவிர நோயாக மாறி குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக நேரலாம்.

இவ்வாறான தீவிர நோயான நீமோகாக்கல் நோய் வராமல் தடுப்பதற்காக, குழந்தைக்கு செலுத்தப்படும் தடுப்பூசியே (பிசிவி) எனும்  நீமோகாக்கல் தடுப்பூசியாகும்.

புதுச்சேரியில் இத்தடுப்பூசி செலுத்தும் பணியை, எல்லைபில்லைச்சவடி பகுதியில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர்  தடுப்பூசி செலுத்தும் பணியினை சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT