தமிழ்நாடு

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

DIN

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் சித்த பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் பேசியது, “ தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளாக சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் அமைக்கப்படும். சித்த பல்கலை.யில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகாவும் இடம்பெறும்.

மேலும், தமிழகத்தில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.266.73 கோடியில் அமைக்கப்படும் என்றார்”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT